செய்தித் துளிகள்
Sports meet - 2016
2016 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டி
A/L RESULTS - 2015
2015.12.04 - எமது கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் பணியாற்றி ஓய்வுநிலை பெற்றிருக்கும் திரு.க.குணம் அவர்களுக்கும் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களுக்கும் தொண்டர் அசிரியருக்கும் கல்விசாரா ஊழியருக்குமான சேவைநலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
2015.12.03 - எமது கல்லூரி ஒளி விழா
தொழில்நுட்பபீட திறப்பு விழா - 14.11.2015
பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்; - 2015
31.10.2015 - எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்; அதிபர் திரு.நா.தனபாலசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.
2015.10.21 - வாணிவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் இல்லங்களுக்கிடையிலான மாலைகட்டுதல்,கோலம் போடுதல் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றியவர்களுக்கான ஆறுதல்பரிசுகளும் சகலகலாவல்லிமாலைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
இல்லப் போட்டி – 2016 இற்கான மாலைகட்டும் போட்டியும் கோலப்போட்டியும் 2015.10.17 சனிக்கிழமை எமது பாடசாலை அதிபர் திரு.நா.தனபாலசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
பரிசளிப்பு விழா – 2015
எமது கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் நினைவு நாளும் 2015.09.15 மு.ப.09.00மணிக்கு நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
புதிய அதிபர் நியமனம்
எமது பாடசாலைக்கு புதிய அதிபராக திரு.நா.தனபாலசிங்கம் அவர்கள் 01.09.2015 தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் எமது பாடசாலையில் முன்னர் நீண்டகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்பதும் எமது கல்லூரியின் கொடிகீதம் இவரால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு சாதனை
2015.06.03- 2015 ஆம் ஆண்டு மாகாணமட்ட பெண்களுக்கான மென்பந்து கிறிக்கெற் போட்டியில் எமது பாடசாலை இவ்வருடமும் 3 ஆம் இடத்தைப் பெற்று தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கான வலயமட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் எமது பாடசாலை 1 ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
2015.02.13 – எமது பாடசாலையின் 2015ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
2015.02.05 - கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் E.சரவணபவன் அவர்களும் எமது பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.
2015.02.01- எமது பாடசாலையின் 2015 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டி(10 Km) இன்று நடைபெற்றது.சிரேஸ்ட ஆசிரியர் திரு.க.கிருஸ்ணமூரத்தி அவர்கள் போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
செல்வன்.S.சிவகரன் - 1ம் இடம் - சிவப்பு இல்லம்
செல்வன்.N.சுலோஜன் - 2ம் இடம் - சிவப்பு இல்லம்
செல்வன்.K.விநோத் - 3ம் இடம் - பச்சை இல்லம்
க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2014 சிறந்த பெறுபேறுகள்
கணிதத்துறை – செல்வன்.எஸ்.கோபிசாந் - A,B,C
உயிரியல் துறை – செல்வி.எஸ்.சிந்துஜா - A,2B
வணிகத்துறை - செல்வி.ரி.யதுசா - A,2B
கலைத்துறை - செல்வி.எஸ்.சாயினி - 2A,B
பரிசளிப்பு விழா - 2014
எமது பாடசாலையில் உள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் 14.10.2014 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணிக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கல்விச் சுற்றுலா - 2014
அடிக்கல் நாட்டு விழா
மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவும் மகிந்தோதய தொழில்நுட்ப பீட அடிக்கல் நாட்டுவிழாவும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் கௌரவ கல்வி அமைச்சர் வருகைதர இயலாத காரணத்தால் மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
வணிக எறியம் நூல் வெளியீடு - 2014
22.04.2014 - எமது பாடசாலையில் நற்பணியாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
2014.04.25 - மாவட்ட மட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் எமது பாடசாலை அணிசிறப்பாக விளையாடி 3ஆம் இடத்தைப்பெற்று மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது
செல்வி.பிறேமகாந்தன் ரிஷிகாந்தி – 9A
2014.03.04 - இன்று நடைபெற்ற வலயமட்ட பெண்களுக்கான மென்பந்து கிறிக்கற்போட்டியில் எமது பாடசாலை அணி சிறப்பாக விளையாடி 2ஆம் இடத்தைப்பெற்று மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது.கடந்த வருடம் 3ஆம் இடத்தைப் பெற்ற எமது அணி இவ்வருடம் 2ஆம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி - 2014
20.01.2014 - இன்று நடைபெற்ற இல்லங்களுக்கு இடையிலான (10km ) மரதன் ஓட்டப்போட்டியில்
செல்வன.சி.;சிவகரன்( சிவப்பு இல்லம்) 1ஆம் இடம்( 32 நிமிடம்)
செல்வன்.க.லக்ஸ்மன்( சிவப்பு இல்லம்) 2ஆம் இடம்
செல்வன்.க.நிக்ஸன்( சிவப்பு இல்லம்) 3ஆம் இடம்
10.01.2014 – மும்மொழிகளிலான பாடசாலையின் பெயர்ப்பலகைத்திறப்பு நிகழ்வும் விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.
2013 க.பொ.த.உ/த பரீட்சையில் கலைப்பிரிவில் செல்வி.சி.அனுசியா 2A 1B பெற்றுள்ளார்.
2013 க.பொ.த.உ/த பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில் செல்வன்.த.சிவகணேசன் 1A 1B 1Cபெற்றுள்ளார்.
05.12.2013 – எமது பாடசாலையில் ஒளி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட கிறிஸ்துவுக்கான இளைஞர்சபை இயக்குனர் திருவாளர் டனீஸியஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பலமான போட்டி
05.11.2013 – 2013 ஆம் ஆண்டுக்கான கோட்டமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் இன்று 16 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் வட்டு இந்துக்கல்லூரி அணியும் அராலி இந்துக்கல்லூரி அணியும் பலமாக மோதிக்கொண்டன. இரண்டு அணிகளும் சமமான வெற்றிகளைப் பெற்றதால் திருவுளச்சீட்டின் மூலம் அராலி இந்துக்கல்லூரி வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
Prize Day - 2013
காங்கேசன்துறை மாவட்ட சாரணர்பாசறைப் போட்டியில்(2013) எமது பாடசாலை முதலாம் இடத்தைப்பெற்றுள்ளது.
World Teachers Day
கலைமாமணி சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களின் ஆன்மீகச்சொற்பொழிவு இடம்பெற்றது.
மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடம்
இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை - 2012 (தமிழ்)
23.08.2013 - எமது பாடசாலைக்கு நோர்வேயிலிருந்து வருகை தந்த பழையமாணவன் திரு.S.குகநேசன் அவர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்காக ரூ.15000ஐ அன்பளிப்பாக வழங்கினார்.